.comment-link {margin-left:.6em;}

Arunkumar

All opinions expressed in this blog are mine.

Thursday, August 02, 2007

ஏ தந்தன தந்தன தன்னா...

சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா?
அட அமெரிக்கா என்றாலும் அது திண்டுக்கலுக்கு ஈடாகுமா?


என்ன இந்தியா கெளம்பியாச்சா-னு கேக்குறீங்களா?
ஆமா இந்தியாவே தான்.. ஆனா நான் இல்ல :(
நமக்கு அந்த அதிர்ஷ்டம் இப்போதைக்கு இல்ல...

பின்ன யாரு?

எல்லாம் நம்ம
சின்சினாட்டி சிங்கம்
திண்டுக்கல் திரிசூலம்
நடன சூராவளி
காலெண்டர் கவிஞர் ,
தான் பட்னியில் இருந்தாலும் அடுத்தவர்களுக்கு உதவும்
எங்கள் பாசத்திற்கும் நேசத்திற்குமுரிய
மன்மத ராசா மணி தான் :-)


ஒரு விஷயம் என்னனா...

ஒரு காலத்துல இயக்கிவிடப்பட்ட மின்விசிறி மாதிரி
சுழன்றுட்டு இருந்த இவரோட வாழ்க்க, இப்போ
சுதந்திரமா வானத்துல சிறகடிச்சி பறக்குற பறவ மாதிரி
ஆயிடுச்சு..

என்ன புரியலயா ?

சிங்கம் சிங்கிளா போகுது ஆனா வரும்போது...


ஆங்.. பாய்ண்ட புடிச்சீங்க.. அதே தான்.. அண்ணாத்தெக்கு
அடுத்த மாசம் கண்ணாலம்.. நாளைக்கு ஊருக்கு போறாரு..
(இது இறந்த காலம்...)
இந்நேரம் ஊர்ல இருப்பாரு (இது நிகழ்காலம்) :)
(லேட்டா எழுதினா இப்பிடித்தான் சமாலிக்கனும் ஹிஹி)

போனதுக்கப்பறம் நம்மள கண்டுக்க எப்பிடியும் டைம்
இருக்காது இதுல ப்ளாக் எல்லாம் கிலோ என்ன விலைனு
கேட்டாலும் கேப்பாரு.. அதுனால அவருக்கு நம்ம இப்பவே
வாழ்த்திரலாம்னு சொல்லி போன வாரம் நானும் நம்ம
கொலம்பஸ் கதாநாயகனும் சின்சி போயிருந்தோம்.

இந்த நிகழ்ச்சியத்தான் வலைப்பதிவர்கள் சந்திப்பு-னு பெரிய
பெரிய வார்த்தை எல்லாம் சொல்லி ஓவர் பில்டப்
குடுத்திருந்தாரு அவரு பதிவுல... வேணாம்பா ஒடம்புக்கு
ஆவாது !! இருந்தாலும் எதாவது சொல்றேன்...

வெள்ளிக்கிழம நைட் வழக்கம்போல ஒரு படம் பாத்துட்டு
(என்ன படம்.. ஹ்ம்ம், ஓசில வாழு இல்ல கஷ்டப்பட்டு சாவு...
செம காமெடி படம்.. சும்மா சொல்லக்கூடாது
ப்ரூஸ் வில்லிஸ் கேப்டனயே மிஞ்சிட்டாரு..) வீட்டுக்கு
வந்து பாசக்கார பயலுகளோட ரம்மி,போக்கர்,டம்சி-னு சில
பல விளையாட்டுகள முடிச்சிட்டு அர்த்த ராத்திரி 5 மணிக்கு
தூங்கி அதவிட அர்த்தராத்திரி 8 மணிக்கு முழுச்சி 9 மணிக்கு
"எல பசுபதி, உட்ரா போவட்டும்"னு எனக்கு நானே
சொல்லிக்கிட்டு வண்டிய மொதல்ல கொலம்பஸ்கு
விட்டாச்சு.

கொலம்பஸ் கிட்ட ஒரு கேஸ் ஸ்டேஷன்ல (அதாங்க
இந்த ஊரு பெட்ரோல் பங்க்.. ஆமா போலிஸ் ஸ்டேஷன்ல
போலிஸ பாக்கலாம். கேஸ் ஸ்டேஷன்ல gas பாக்க
முடியுமா?) அம்பி மாதிரி ஒரு சின்ன கொழந்த.. அது கிட்ட
தலைவர் போட்டோ காட்டினது தான் தாமதம்.. "i know him,
hez the one who wrote terakural... rite"னு சொல்லிட்ச்சு...
"hey no no , that is kittu maama, hez dreamworld hero.. do u know
where he lives"?னு கேட்டா "yeah, he lives right down the street,
he rides a taxi"னு சொல்லி நம்மல கொலப்பிட்சு..

நம்மாளுக்கு ப்ளாக் எழுதவே 25hrs தேவ, இதுல என்ன taxi?
அப்பறம் தான் புரிஞ்சது அந்த ஏரியாவுல தலைவர் காரு
தான் புதுசா ஆண்(ன்??)சைட் வர எல்லாருக்கும் பப்ளிக்
ட்ரான்ஸ்போர்ட்-னு :) ஸ்ஸ்ஸ் SANMUGA !!!
ஹி ஹி இந்த ஊர்ல என்னோட காரும் அப்பிடித்தான் !!
அதனால இதப்பத்தி பேச்ச கொறச்சிக்குறேன்..

சரி எங்க விட்டேன்.. ஹ்ம்ம்.. ஒரு 11.30 மணிக்கு தலைவர்
வீட்டுக்குள்ள போறேன்.. ஊதுபத்தி எல்லாம் கொளுத்தி ஒரே
பக்தி மயம். அட நம்புங்க.. அவரோட மடிக்கணினி
background கூட முருகரு தான்... அதுனால தான்
அவரு தல !!

சுடச்சுட நமக்கு தோச ஊத்தி குடுத்தாரு.. தொட்டுக்க இட்லிப்பொடி,எண்ணெய் :) ஆஹா சூப்பர் !!
(தலிவரே அடுத்த தபா நான் வேண்டான்னு சொன்னேனு
ஒன்னோட நிறுத்தப்படாது.. சரியா? ஹி ஹி)

அன்னிக்கு தான் நம்ம மை ஃபிரண்டுக்கு பர்த் டே..
என்னோட & தலைவரோட பிறந்த நாளுக்கு அவங்க
மலேசியால இருந்து call பண்ணி பாசத்த காமிச்சாங்க..
அவங்க பொறந்த நாளைக்கு நாங்க ரெண்டு பேரும்
சேந்து call பண்ணோம்... ஒரே சர்ப்ரைஸ் அவங்களுக்கு..
ஒலகம் எவளோ சின்னது , அதுல தமிழன் மனசு எவளோ
பெருசு பாத்திங்களா :)
(அட்ரா அட்ரா)

விஷ் பண்ணிட்டு வண்டிய சின்சி சிங்கம் வீட்டுக்கு
விட்டாச்சு.. என்னோட பழைய வீடுங்குறதால நமக்கு
கொஞ்சம் நாஸ்டால்ஜிக் !!! என்ன இருந்தாலும் காப்பு
கிட்ட மாட்டின ஊராச்சே :)
(இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்).

நாங்க போனப்ப தான் என்னோட இன்னொரு ஃபிரண்டு
ஒரு புது காரு வாங்கினான்.




அத கொண்டாட ஒரு மெக்ஸிகன்
ரெஸ்டாரண்டுக்கு போய் நல்ல முக்கிட்டு , புது மாப்ள
மணிக்கு எங்களால ஆன ஆறுதல சொல்லிட்டு எனக்கு
அடுத்த நாள் ஆணி புடுங்குற வேல கொஞ்சம் இருந்ததால
சாயந்தரம் கெளம்பி தலைவர ட்ராப் பண்ணிட்டு அவரு
வீட்ல ஒரு டீய குடிச்சிட்டு எங்கூருக்கு கெளம்பி
வந்துட்டேன்.. அவளோதான் மேட்டர்...

அப்ப எடுத்தது போட்டோஸ் பாக்க
http://mani-vilas.blogspot.com/2007/07/blog-post_23.html

UPDATE:
(இபப்தான் பதிவே போட்றேன், அதுக்குள்ள அப்டேட்டா?
என்ன கொடும சார் இது?)

மணி சின்சிய விட்டு கெளம்பறதுல ஒரே கண்ணீர்..
ஒரு வருஷத்துக்கும் மேல இருந்த ஊராச்சே !!!
அந்த பீலிங்க்ஸ புரிஞ்சிக்கிட்டு நான் எழுதின பாட்டு :)

*******************
கத்தாளங்காட்டு வழி சின்சினாட்டி ரோட்டு வழி
டேக்சி கட்டி போறவனே, வாக்கப்பட போறவனே...

ஏரோப்ளேனு எட்டு வச்சி முன்னே போகுதம்மா
வாக்கப்பட்ற பையன் மனம் பின்னே போகுதம்மா

ஹைட்டு மேல ஹைட்டு வச்சி மேல பறக்குதம்மா
ஜீன்ஸு போட்ட பையன் மனம் கீழ பாக்குதம்மா

தாயி தங்கமணி மனசு மருகுதம்மா
ஏர் ஹோஸ்டஸ் பாக்கயிலுன் ஓன் மொகமே தெரியுதம்மா
...
...
வாசப்படி கடக்கயிலே வரலயே பேச்சு
அமெரிக்கா தாண்டிப்புட்டா பூரிக்கட்டைனு ஆச்சு..

ஏரோப்ளேனு எட்டு வச்சி முன்னே போகுதம்மா
வாக்கப்பட்ற பையன் மனம் பின்னே போகுதம்மா

*** stanza 2.. dhoda***
சின்சி போய் வரவா க்ளையண்டே போய் வரவா?
டென்னிஸ் போய் வரவா ஸ்விம்மிங்கே போய் வரவா


ஜெர்சி போட்டு நான் வெளாண்ட ஃபுட்பால் ஒன்னவிட்டு
பூரிக்கட்டை சுமந்து நிற்கும் துனைவியோடு போய் வரவா?

சட்டப்படி ஆம்பளைக்கு ஒத்த எடந்தானே..
கணிப்பொறி யாளனுக்கோ ரெண்டு எடந்தானே..

ஏரோப்ளேனு எட்டு வச்சி முன்னே போகுதம்மா
வாக்கப்பட்ற பையன் மனம் பின்னே போகுதம்மா


*******************

கொலவெறி இல்லாத திருமண வாழ்த்துக்கள் நண்பா :)


-அருண்

Friday, July 06, 2007

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு !!!

ஹட்ச் ஹட்ச் ஹட்ச்.. (கோப்ஸ்,ஏர்டெல் எங்கனு
எல்லாம் கேக்கக்கூடாது)

ப்ளாக் உலக மக்களே, உங்க பாசமான வாழ்த்து
மழைல நனஞ்சி from yesterday ஒரே ஜலதோஷம்.


இப்பிடி ஒரு போஸ்ட் போட்டு இந்த பொறந்த
நாள என்னைக்கும் மறக்க முடியாத மாதிரி
ஆக்கிட்டீங்க. சத்தியமா இதுவரைக்கும் இப்பிடி
ஒரு பர்த் டே நான் கொண்டாடினது இல்ல..
ரொம்ப ரொம்ப நன்றி மக்களே...


ஜி3, போஸ்ட் சும்மா அதிருது !!! ஸ்பெஷல் தேங்க்ஸ்
டு யூ :-) தொடரட்டும் உங்க சேவை :)



அவங்க அவங்க ஸ்டைல்ல வாழ்த்து சொல்லி
கதை எழுதி,கவிதை / கவுஜ எழுதி / கார்ட் அனுப்பி
அப்பறம் எனக்கு மெயில் அனுப்பி, call பண்ணி
அப்பறம் ப்ளாக்-யூனியன் அண்ட் சங்கம் விஷஸ்-ல
வாழ்த்து சொன்ன எல்லாருக்கும் நன்றி நன்றி நன்றி.


ஏதோ என்னால முடிஞ்சது இந்த ஒரு THANK YOU கார்டு




நேத்திக்கு நைட் நடந்த கூத்துல சில படங்கள்
இங்கே உங்கள் பார்வைக்கு :)



சூப்பரா இருக்குல்ல கேக்.
என்ன, நம்ம வயச விட அதிகமான
candles வச்சிட்டாங்க :P
எல்லாம் உங்களுக்கு தான் :)


கொஞ்சம் கேக்க எடுத்து மூஞ்சில அப்புறது ஓல்ட் ஸ்டைல்
நம்ம மூஞ்சியவே கேக்குல முக்குறது புது ஸ்டைல்





தொடச்சிட்டு வந்தேன்னா சும்மா கமலஹாசன் மாதிரி
இருப்பேன்.........




னு பாத்தேன்... இல்ல.. என்ன மாதிரி தான் இருந்தேன் !!

அப்பறம் நம்ம பொறந்த நாள முன்னிட்டு அமெரிக்க
அரசாங்கமே வெடி வெடிச்சது முந்தா நாள் :)


மொத்தத்துல இந்த பர்த் டே ரொம்பவே கலர்ஃபுல் !!!

மீண்டும் பல முறை நன்றிகள் சொல்லிவிட்டு உங்களிடம் இருந்து விடைபெற்றுக்கொள்கிறேன் மக்களே :)

Wednesday, June 27, 2007

மீண்டும் ஒரு காதல்(இல்லா) கதை!

வணக்கம் மக்களே. எப்பிடி இருக்கீங்க? ஒரு 2 மாசமா
நான் பாட்டுக்கு ப்ளாக் யூனியன்ல கும்மி அடிச்சிட்டு
உங்க ப்ளாக எல்லாம் சைலண்டா படிச்சிட்டு வாரா
வாரம் ஊர் சுத்திட்டு சம்மர என்சாய் பண்ணிட்டு
இருந்தேன். பாசக்கார பயலுக சும்மா விடுவீங்களா?
தெனம் ஒரு டேக் போட்டு ஒரு கொல வெறியோட
பாசத்த காமிச்சிட்டீங்க !! நன்றி ஹைய்
(இந்த ஊரு இன்னுமாடா நம்மள நம்புது-னு
மனசாட்சி வேர அடிக்கடி கேக்குது)

சிவா , கோப்ஸ் , பரணி, கில்ஸ்-னு எல்லாரும் டேக்
பண்ணியிருக்காங்க.. அது கூட பரவாயில்ல..
"டேகுகள் பலவிதம் எல்லாமே ஒரு விதம்"-னு
சந்தோஷமா தான் இருந்தேன் (எல்லாமே 8 டேக்)
ஆனா பரணி ஆரம்பிச்ச ஒரு கதைய செம
ட்விஸ்டோட நிறுத்தி.. அத என்ன.. இந்த சின்ன
பையன தொடர சொல்லிட்டாங்க நம்ம கொடி.
என்னா ஒரு வில்லத்தனம்.
நம்மகிட்ட ஒரு கதை சிக்கனும்னு இருக்கு.
சரி எழுதுவோம்...

பார்ட் - 1 (பில்லு பரணியோட அம்பது வருஷத்து கனவு)
பார்ட் - 2 (ப்ளாக் உலக சிவசங்கரி குடுத்த ட்விஸ்ட்)
பார்ட் - 3 (கொடியின் ROTFL + மெகா ட்விஸ்ட்)

<<<<<<<<<<<<<< இதுவரை >>>>>>>>>>>>>>>>>>

"ஆமாண்டா நம்ம பெரியவன் கணேஷை பத்தி கேள்வி
பட்டாங்களாம்.. ஜாதகம் தர்றீங்களானு கேட்டாங்க.
சரினு சொல்லிருக்கேன்.
அந்த பொண்ணு கூட உன் காலேஜ் தானாமே??"

"டமால்" (கார்த்திக் இதயம்)
...

<<<<<<<<<<<<<< இனி >>>>>>>>>>>>>>>>>>
அதிர்ந்து போய் குழப்பத்தில் இருந்த கார்த்திக்கை பார்த்து,

"டேய் கார்த்தி.. என்னடா அப்பிடி பாக்குற என்ன ஆச்சு ஒனக்கு?

கையில் காபி டம்ளருடன் இருந்த அம்மாவை பார்த்து
கார்த்திக் மேலும் குழப்பத்துடன்..

"அம்மா.. நீங்க... ஃபோன்ல..
அந்த ஜாதகம்..
கணேஷ்... "

"என்னடா ஒளர்ர.. என்ன ஃபோனு என்ன ஜாதகம்...
யாரு கணேஷ்? காலங்காத்தால எதாச்சும் கனவு கண்டியா?"

ஒரு நிமிட சுதாரிப்புக்கு பின்...

"அடச்சி.. அப்பொ அதெல்லாம் கனவா?"

"ஹ்ம்ம், ஒனக்கு பிடிக்குமேனு ஆசயா செஞ்ச சப்பாத்தி தக்காளி
குருமாவ சாப்பிடலல.. அதான் ஏதோ கெட்ட கனவு
வந்துர்க்கு... "

"நீ வேர மா.. "

"அப்பிடி என்னடா கனவு? நானே பயந்துட்டேன்
ஒன்ன எழுப்பினதுல... "

"அத ஏன் மா கேக்குற.. கனவுல ஒரு 'வாலி' படமே ஓடிச்சு..
நல்ல வேல 2nd half வரதுக்குள்ள நீ எழுப்பீட்ட.."

"அது சரி யாரு கணேஷ்?"

"கனவுல என்னோட அண்ணம்மா"

"அடப்பாவி.. ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு-னு
பெத்து வச்சிர்க்கோம்.. சரி சரி காலேஜ்க்கு லேட் ஆவுது,
இந்த காபிய குடிச்சிட்டு சீக்கிரம் குளிச்சிட்டு வாடா.
சப்பாத்தி சுட்டுத்தறேன்.."

சுமார் 30 நிமிடங்கள் கழித்து..

டிவியில் பாட்டு கேட்டுக்கொண்டே சாப்பிட்டான் கார்த்திக்..

"அம்மா தக்காளி குருமா சூப்பர்... ஒன் மோர் சப்பாத்தி..."

இன்னொரு சப்பாத்தியை வைத்துவிட்டு..

"கார்த்திக்.. இந்த சந்தியா சூப்பர்ல.. காலேஜ்லலான் என்ன
பேசிப்பீங்க.."

கார்த்திக் ஆச்சர்யத்துடன்...

"சந்தியா...
காலேஜ்..
அம்மா, உங்களுக்கு... எப்டி.."

"அட்டா.. அம்புட்டு நல்ல பசங்களாடா நீங்க...
சன் ம்யூசிக் சந்தியாவ பத்தி பேசாத காலேஜ் பசங்களா?"

"ஸ்ஸப்பா.. "

ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங்

"ஃபோன் அடிக்குதே எடேண்டா கார்த்தி.."

"அய்யோ ஃபோனா... நாயில்ல.. நீயே வந்து எடு"

"ஹலோ..
..
ஆமாங்க, அவன் அம்மா தான் பேசுறேன்..
..
..

"அப்டியா.."
..
..
"பையன் எங்ககிட்ட சொல்லல.. அவங்க அப்பா வந்ததுக்கு
அப்பறம் பேசிட்டு சொல்றோங்க.."

.."நானும் நல்லதே நடக்கணும்னு விரும்பறேன். கடவுள் சித்தம்."

ஃபோன் கட் பண்ணிட்டு..

"டேய், எத்தன நாளாடா இது நடக்குது.."

"அம்மா.. அது.. வந்து..."

<<<<<<<<<<<<<<<<< ஐ யம் டன் >>>>>>>>>>>>>>>>>>>>>

ஸ்ஸ்ஸ்ஸப்பா.. ஒரு வழியா கடமய முடிச்சிட்டேன்..
இத தொடர ப்ளாக் உலக குழந்தை, அண்ணன், தம்பி,
பேரன் முக்கியமா என்னோட தல & குரு அம்பிய
கூப்டுக்குறேன்.. லவ் ஸ்டோரி எழுத எனக்கு தெரிஞ்சு ப்ளாக் உலகத்துல இவருதான் கிங் :)

அப்பால மத்த டேக எல்லாம் எழுத ட்ரை பண்றேன்..
சிவாஜி படம் பாத்த எக்ஸ்பீரியன்ஸ் அடுத்த பதிவில்
படங்களுடன்..

வர்ட்டா..

Monday, May 07, 2007

அழகோ அழகு

ஹாய் மக்காஸ் & மக்கிஸ், எப்பிடி இருக்கீங்க?
இப்பதான் பதிவு போட்ட மாதிரி இருக்கு,
அதுக்குள்ள 20+ நாள் ஓடிப்போச்சு.
"இங்க நான் ஒரே பிசி, அதான் பதிவ முடியல"-னு
பொய் சொன்னா அப்பறம் எனக்கு போஜனம்
கெடைக்காம போயிடும். அதனால அப்பிடி சொல்ல
மாட்டேன். இங்க ஸ்பிரிங் சீசன் ஸ்டார்ட் ஆயிர்க்கு.
(எப்போ நட்/போல்ட் சீசன் வரும்னு எல்லாம்
கேக்கப்டாது) So, ஊர் சுத்த ஆரம்பிச்சாச்சு. அதான்

பதிவு போட முடியல.

சரி, நானும் உங்கள எல்லாம் கொஞ்ச நாள் freeயா
விடலாம்னு தான் நெனச்சேன். ஆனா சங்கத்துல நான்
அனுப்புன பதிவ 105ல 14ல 6ல 1ஆ போட்டு நம்மல
இன்ப வெள்ளத்துல மூழ்கடிச்சுட்டாங்க :)
அதான் திரும்ப வந்துட்டேன். சங்கத்து சிங்கங்களுக்கு
மறுக்கா ஒரு தடவ நன்றி சொல்லிக்குறேன்.

"ஒனக்கு அழகா எதுவும் எழுத வராது, அட்லீஸ்ட்
அழகு டேகாவது எழுது"னு நம்மல டிடி அக்கா
கொஞ்ச(???) நாள் முன்னாடி டேக் பண்ணியிருந்தாங்க.
deadline இருந்தாலே நாம எல்லாம் லாஸ்ட் மினிட். இதுல
deadline வேர குடுக்கல. அதனால வழக்கம்போல இந்த
டேக்ல இருந்தும் "எஸ்" ஆயிடலாம்னு (நாட்ஸ் மாதிரி)
தான் பாத்தேன். ஆனா அக்கா சேட்ல வந்து டேங்கர்
அனுப்பிடுவேன்னு பயமுறுத்தி எழுத சொல்லிட்டாங்க :(

எனக்கு தெரிஞ்சு வலையுலகமே எழுதி முடிச்சாச்சு இந்த
டேக. மக்கள் ஆனால இருந்து அக்கன்னா வரைக்கும்
எந்த அழகையும் விட்டு வைக்கல.. இந்த அழகுல நான்
என்னத்த புதுசா அழகுறது-னு தெரியல.. அதனால சிலது
ரிப்பீட் ஆகலாம். அதுக்கு நான் பொறுப்பு கெடயாது.
அழகா மன்னிச்சிடுங்க :-)

தாஜ் மஷால்
எது, பாரதிராஜா ரியா சென்ன வச்சி எடுத்த படமா?-னு
சில பேரு கேப்பாங்க..
(ஐயோ கோப்ஸ், நான் உங்கள சொல்லுவேனா?)
அவுங்களுக்காகத் தான் கீழ படம் போட்டுர்க்கேன் :)




நோட்டு அட்டைல , போட்டோல, டிவில-னு எப்போ
பாத்தாலும் எந்த ஆங்கில்ல பாத்தாலும் தாஜ்மஹால்
அழகு தான். நான் இந்தியால வடக்கு மோஸ்ட் போனது
ஹைதராபாத் வரைக்கும் தான்.
(என்ன கொடும கொடி இது?)
அதுனால இதுவரைக்கும் இத நேர்ல பாத்ததில்ல :(
ஆனா பாத்துட்டு வந்தவங்க எல்லாம் "போட்டோல
பாக்குறத விட அழகா சூப்பரா இருக்குனு தான்
சொல்லீர்க்காங்க.. ஹ்ம்ம் , நயகரா கூட பாத்துட்டேன்.
இந்த ஆக்ரா அழக எப்ப பாப்பேனோ?

ஒன்னு கவனிச்சீங்களா, ஒரு ரங்கமணி அவரோட
தங்கமணிக்காக என்ன எல்லாம் செஞ்சிருக்காரு...
என்ன ரங்கமணிஸ், உங்க தங்கமணிக்கு நீங்க
என்ன என்னலாம் செஞ்சிருக்கீங்க? பூரிக்கட்டைல அடி
வாங்குற தவிர :)

என்ன தங்கமணிஸ்,
இதெல்லாம் கேக்குறதில்லயா? ஏதோ அக்ஷய த்ரிதி அது
இதுனு வேர வந்துட்டு போயிர்க்கு... :) அது போயிடுச்சு..
நான் சும்மா ஞாபகப் படுத்துறேன் :) உங்க ரங்கமணியோட
மணி(money)ய தங்கமா மாத்துறதுனால தான் உங்களுக்கு
அந்த பேரே வந்துர்க்கு. பேர காப்பாத்திக்கோங்க :) நான்
சொல்றத சொல்லிப்புட்டேன்...
ஓகே...அழகா பத்த வச்சாச்சு :)


டால்ஃபின்ஸ்
கடல் ஜீவன்கள்ல எனக்கு அழகா தெரியுற ஒரே ஐடம்.
கடலுக்குள்ள இருந்து எட்டி குதிச்சு மறுபடியும் டைவ்
அடிக்குற அழகே அழகு தான்.



டைட்டானிக் படத்துல அவளோ பெரிய கப்பலுக்கு
கீழ 2 டால்ஃபின்ஸ் குதிச்சு விளையாடுற சீன் சூப்பரா
எடுத்துருப்பாங்க.. படத்துலயே ரொம்ப அழகான சீன்
அது தான். டைட்டானிக்-னு சொன்ன
உடனே ஞாபகம் வர்து. எங்க காலேஜ் ஜூன்ஸ்
டைட்டானிக்-க ரீமேக் பண்ணி ஸ்கிட் போட்டுர்ந்தாங்க..
செம ROTFL.. அவசியம் பாருங்க..






மதுரை மீனாக்ஷிஅம்மன் கோவில்


மதுரைல பொறந்துட்டு இதப்பத்தி சொல்லாம எப்பிடி...
கோயில்ல சாமி கும்பிட்றத விட "இதெல்லாம்
எப்பிடித்தான் கட்டினாங்களோ"னு தான் யோசிச்சிட்டு
இருப்பேன். கோவில்ல எப்பவுமே ஸாட்ஸ் போட்டு
வெள்ளக்காரனுங்க கோபுரத்தையே பாத்துட்டு இருப்பாங்க..
சின்ன வயசுல நெனப்பேன் "இவிங்க ஊர்ல இல்லாதது
அப்பிடி என்ன இதுல இருக்கு"னு.. அப்பறம் தான்
புரிஞ்சது... ஆர்ட்-னா அது நம்ம ஊரு தான்னு. இங்க
மட்டும் இவளோ கலை நயத்தோட அழகா கோயில்
கட்டியிருந்தாங்கனா எப்பவோ world's eighth wonder-ஆ
ஆக்கியிருப்பாங்க !!

Fall Colors

சொந்த ஊரப்பத்தி சொல்லியாச்சு , வந்த ஊரப்பத்தி
சொல்லனும்ல.. இங்க ஒவ்வொரு சீசனும் ஒரு ஒரு
விதத்துல அழகு தான். மொதோ தடவ SNOW பாத்தப்ப
செம அழகா இருந்துச்சு. ஆனா அது ஒரு மாசத்தோட
சரி.. அப்பறம் அதோட டெய்லி மல்லாடனும்னு

நெனச்சாலே கடியா இருக்கும். ஒரு வழியா SNOW

ஓவர் இங்க :)
ஆனா Fall சூப்பரா ரசிக்கலாம். கலர்ஸ் பாக்க கண்ணுக்கு
குளிர்ச்சியா இருக்கும். (எந்த கலர்ஸ்-னு எல்லாம் context
வச்சி புரிஞ்சிக்கிரனும்..)

மயில்

"ஆத்தா , நான் பாஸ் ஆயிட்டேன்"னு மயிலு வரப்புல ஓடி
வர்ற அழகே அழகு தான்.. சி.. என்ன சொல்ல வந்து என்ன
சொல்றேன்... நான் கீழ இருக்குற நம்ம தேசியப்பறவை
மயிலத்தான் சொன்னேன். நம்புங்கோவ் :)






ஆங்கிலத்தில் Peacock எனப்பெயர் வரக் காரணம்:
தமிழகம் மற்றும் இலங்கையில் இருந்து மயில்
தோகையை இறக்குமதி செய்து வந்தனர் அரேபியர்.
தமிழ் தோகை, அரபிய மொழியில் tawus ஆகியது.
அங்கிருந்து கிரேக்கத்திற்கு சென்ற மயில் தோகை,
அங்கு pfau ஆக மாறியது. அது லத்தீன் மொழியில்
பேவோ ஆக மாறியது. அதிலிருந்து ஆங்கிலத்தில்
பேவ் எனவும், பின்னர் Peacock எனவும் மருவியது.

அப்பிடினு கண்டிப்பா நான் சொல்லல.. விக்கீபிடியா
சொல்லுது. ஆனா பேவ் எப்பிடி peacock ஆச்சுனு அது
சொல்லவே இல்ல :)


அட, இது எல்லாம் என்னங்க அழகு.. இது
எல்லாத்தையும் விட அழகு மக்காஸ் அண்ட் மக்கிஸ்
நீங்க தான். குறிப்பா என்ன டேக் பண்ண சுதாக்கா :)
அவங்க தான் வலை உலகத்துக்கே அழகு சேக்குறாங்க
அவங்க ப்ளாக் மூலமா !!!
(நீங்க சொன்ன மாதிரி பொட்டி வந்து சேரனுங்கா.. )

அப்பறம் ப்ரியாவோட இந்த டேக்ல "நயன் அழகு பத்தி
யாருமே சொல்லல, யாருக்குமே ரசனை இல்லனு" நாட்ஸ்
சோகமா சொல்லியிருந்தாரு. அப்பிடி இல்ல நாட்டாம..
தம்பி நான் இருக்கேன். எங்கள மாதிரி அழக ரசிக்குறவங்க
நெறைய பேரு இருக்காங்க-னு ப்ரூவ் பண்ணத்தான் இது :)

ஆணிக்கு ப்ளாக் அழகு
ப்ளாகுக்கு தமிழ் அழகு
தமிழ் ப்ளாகுக்கு நாட்ஸ் அழகு
நாட்ஸுக்கு நயன் அழகு
நயனுக்கு....


சரி விடுங்க நாட்ஸ்... இதுக்கெல்லாம் போய் பீல்
பண்ணிக்கிட்டு. தியாகங்கள் நிறஞ்சது தானே
பொது வாழ்க்க :) நயனுக்கு குடுத்து வச்சது
அவளோதான் :)
அப்பறம் நாட்ஸ், நம்ம தல கார்த்தி சொன்னது படி
"யாரது நீ மோகினி"-னு கூகில்ல தேடி லேட்டஸ்ட்
ஒரு பத்து ஸ்டில்ல இருந்து அதுவும் பெய்ண்ட் ஷாப்
போயி அந்த கருவாப்பய தனுஷ படத்துல இருந்து
கட் பண்ணி போட்டுர்க்கேன்.. எல்லாம் உங்க மேல
இருக்குற பாசத்துக்காக... டி.சி வந்தா உங்க தங்கமணி
கிட்ட இருந்து காப்பாத்துவீங்கள்ல? :-)

அப்பா ஒரு வழியா முடிச்சிட்டேன். அப்பீட்டு

வர்டா...

Yaaruppa adhu purali kelappuradhu ?

Naan indha kadaya moodittadha oorla paravala pesikkiraanga-nu
thagaval vandadhu. apdi ellam ungala nimmadiya vitra maaten-nu
prove panna thaan indha jalli padivu.



web-ulagame ezhudi mudicha andha beauty tag draft-la irukku.
seekirama adha compile panni production-la migrate panren :)

Evening paapom...

Varata...